பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும் தரம் 3, 4, 5 ( பாடநூல் ,கைந்நூல் )



பழமொழிகளும்
 அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும் தரம் 3, 4, 5 ( பாடநூல், கைந்நூல் ) , Tamil proverbs with meanings, scholarship




தரம் 3 தமிழ்


பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்

01) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் -

மனவெளிப்பாடு

02) ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு -

கோபம் சிந்தனைக்கு இடையூறு

03) இளமையிற் கல்வி சிலையில் எழுத்து -

 இளவயதுக் கல்வி நிலைத்திருக்கும்

 04) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு -

ஒற்றுமை உயர்வு தரும்

 05) கந்தையானாலும் கசக்கிக் கட்டு -

வறுமையிலும் செம்மையாக வாழ்

 06) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை -

உறவுகளை சேர்ந்திருப்பது நன்மை தரும்

07) மின்னுவதெல்லாம் பொன்னல்ல -

கவர்ச்சியானவையெல்லாம் நல்லவையல்ல

08) பொறுத்தார் பூமியாழ்வார் -

பொறுமை வெற்றி தரும்

 09) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் -

நோய் இன்றி வாழ்வதே பெரிய செல்வம்

10) இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை -

தருமம் செய்

தரம்-4 தமிழ்

பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்

01) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு -

ஒற்றுமையே பலம்

 02) அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் -.

 விடாமுயற்சியாற் பயன் உணடு  அளவோடு
செய்தல் வேண்டும்

03) ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு -

எதையும் அளவோடு செய்தல் வேண்டும்.

04) உப்பிட்டவரை உள்ளளவும் நினை -

நன்றி மறத்தல் கூடாது

05) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? -

 இளமையிற் செய்

06) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் -

ஓர் உதாரணமே போதும்

07) கடுகு சிறிதானாலும் காரம் பெரிது -

சிறியதன் வலிமை

08) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு -

எந்தத் தாய்க்கும் தனது பிள்ளை மேலானவர்

09) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்; -

சந்தர்பத்தை தவற விடக்கூடாது

10) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். -

குற்ற உணர்ச்சியினால் மனதால் துன்புறுவர்.

11) சிறுதுளி பெருவெள்ளம் -

சேமிப்பின் மகிமை

 12) சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை
நாடாது. -

அனுபவம் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்

13.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது -

இன்றியமையாதது

 14) அலைமோதும் போதே தலைமுழுகு -

சந்தர்பத்தை தவற விடக்கூடாது

 15) ஆறின கஞ்சி பழங்கஞ்சி -

காலத்தின் மகிமை

 16) போதுமென்ற மனமே பொன் செய்யும்
 மருந்து -

மனநிறைவே சிறந்த செல்வம்

 17) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் -

தீமை செய்தால் தீமை வரும்

 18) விளையும் பயிரை முளையிலே தெரியும் -

இளமையில் எதிர்காலம் புலப்படும்.

 

 

தரம் -5 தமிழ்

பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்

01) ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா? -

 அனுபவமற்ற கல்வி

 02) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - 

அதிக ஆசை அழிவைத் தரும்.

03) கடனில்லாத கஞ்சி கால்வயிறு போதும் -

மானத்துடன் வாழ வேண்டும்

04) அழுத பிள்ளை பால் குடிக்கும் -

முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

05) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் -

சிறுவயதுப் பழக்கம் நீங்காது

 06) சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரையலாம் -

உடல் வலிமை அவசியம்

 07) முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் -

தீமை செய்தால் தீமை வரும்

08) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் -

 திறமையில் நம்பிக்கை

09) பேராசை பெரு நட்டம் -

எல்லை கடந்த ஆசை துன்பம் தரும்

 10) பதறாத காரியம் சிதறாது -

அமைதியின் வெற்றி

11) ஆனைக்கும் அடி சறுக்கும் -

பெரியவர்களும் தவறு விடலாம்

12) நிறைகுடம் தளம்பாது -

படித்தவர் அதிகம் பேசமாட்டார்

 13) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு -

 ஒற்றுமையே பலம்

14) மனமுண்டானால் இடமுண்டு -

எதையும் விருப்போடு செய்வதன் அவசியம்

 15) இளங்கன்று பயமறியாது -

வாலிபத் துணிவு

 16) இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை-

திருப்தியற்ற மனம்

 17) பழகப் பழக பாலும் புளிக்கும் -

 மதிப்புக்குறைதல்

 18) தவளையும் தன் வாயாற் கெடும் -

நாவடக்கத்தின் அவசியம்

 19) போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து -

திருப்தியான மனமே சிறந்த செல்வம்.

 20) சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும் -

சிறு பொருளையும் பாதுகாத்தல் வேண்டும்

 21) குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை -

தவறுகளை பொறுத்தால் உறவுகள ; வளரும்

 22) நிழலின் அருமை வெயிலில் தெரியும்-

 ஒன்றின் அருமை அது இல்லாதபோது தெரியும்

 23) அன்பான சிநேகிதனை ஆபத்தில்
அறியலாம் -

உத்தம நட்பு

 24) உண்ணாச் சொத்து மண்ணாய் போகும் -

 உலோபம் கூடாது

 25) உப்பில்லாப் பண்டம் குப்பையிலே -

முக்கியத்துவத்தின் உயர்வு

 26) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் -

ஓர் உதாரணமே போதும்

 27) குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி
மங்காது -

நற்புகழ் என்றும் மங்குவதில்லை

 28) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் -

தொடர்பயிற்சி வெற்றி தரும்

 28) ஆழமறியாது காலை விடாதே -

 எதையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்

 

ஆத்திசூடியும் அதன் பொருளும்.

 01) கண்டொன்று சொல்லேல் -

பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

 02) ஞயம்பட உரை -

இனிமையாகப் பேசு

 03) இணக்கம் அறிந்து இணங்கு -

 ஒருவரின் குணங்களை அறிந்து நட்புகொள்ள வேண்டும்

 04) சித்திரம் பேசேல் -

பொய்யானவற்றை மெய்போல் பேசாதே

 05) தேசத்தோடு ஒட்டி வாழ் -

உன்நாட்டு மக்களுடன் ஒற்றுமையாக வாழ்

 06) நுன்மை நுகரேல் -

நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

 07) நேர்பட ஒழுகு -

ஒழுக்கம் தவறாமல் நேர்வழியில் நட.

 08) பேதமை அகற்று -

அறியாமையைப் போக்கு

 09) பெரியாரைத் துணைக் கொள்-

அறிவில் சிறந்த பெரியோர்களைத் துணையாகக் கொள்

 10) வித்தை விரும்பு -

கல்வியாகிய நற்பொருளை விரும்பு

கீழ் உள்ள Download ஐ அழுத்துவதன் மூலம் PDF file வடிவில் தரையிறக்கம் செய்து பயன்பெறுங்கள்




Post a Comment

0 Comments